கோவையில் ராணுவ தளவாட கண்காட்சி; கவர்னர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார்

இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் விமானப் படை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Update: 2024-08-13 07:41 GMT

கோவை,

கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் ராணுவ தளவாட கண்காட்சியை கவர்னர் ஆர்.என். ரவி இன்று தொடங்கி வைத்தார். இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய 4 நாடுகளின் விமானப் படை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் 62 அரங்குகளில் ஹிந்துஸ்தான், பெல் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தேஜஸ், Su-30MKI, Mig29K உள்ளிட்ட இந்தியாவின் அதிநவீன போர் விமானங்கள் இடம்பெற்றுள்ளன. பன்னாட்டு கூட்டு விமானப் படை பயிற்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் கண்காட்சியை வரும் 15ம் தேதி பொதுமக்கள் பார்வையிடலாம் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்