மருத்துவ காப்பீட்டு திட்ட விழா

தென்காசியில் மருத்துவ காப்பீட்டு திட்ட விழா நடந்தது.

Update: 2023-09-30 19:48 GMT

தமிழக அரசு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் ஆகியவற்றின் இணைந்த 5-ம் ஆண்டு விழா, தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரேமலதா முன்னிலை வகித்தார். விழாவில் காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்று குணமடைந்த பயனாளிகள் 5 பேருக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டை 5 பேருக்கும், பிரதம மந்திரி காப்பீடு திட்ட அட்டை 5 பேருக்கும் வழங்கப்பட்டன. மேலும் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய 3 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனை, மீரான் மருத்துவமனை ஆகியவற்றிற்கு நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஓவிய போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு நினைவு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட மாவட்ட அலுவலர் ஜோதிவேல், அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின், மீரான் ஆஸ்பத்திரி நிறுவனர் டாக்டர் அப்துல் அஜீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்