ஆட்டை கடித்து குதறிய வெறிநாய்கள்

ஆட்டை வெறிநாய்கள் கடித்து குதறின

Update: 2022-12-12 20:07 GMT

உப்பிலியபுரத்தை அடுத்த பி.மேட்டூரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 62). விவசாயி. இவர் தோட்டத்துடன் கூடிய வீட்டில் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். நேற்று மாலை இவரது கொட்டகையில் புகுந்த வெறிநாய்கள் ஒரு ஆட்டை கடித்து குதறின. இதைகண்ட அக்கம்பக்கத்தினர் கல்லால் எறிந்து நாய்களை துரத்தினர். காயம் அடைந்த ஆட்டுக்கு கால்நடைத்துறையினர் சிகிச்சை அளித்தனர். எனவே வெறிநாய்களை பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்