திராவிட சாயலில் விஜய் பயணிப்பதுபோல் தெரிகிறது: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

சிறுத்தைபோல் இருந்த திருமாவளவன் தற்போது சிறுத்துப் போய்விட்டார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2024-09-17 08:24 GMT

சென்னை,

சென்னையில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நடிகர் விஜய் கட்சித் தொடங்குவதற்கு முன்பே திராவிட சாயலில் பயணிப்பதைபோல் தெரிகிறது. திராவிட சாயலில் வேறொரு கட்சித் தமிழகத்திற்கு தேவையில்லை. தேசிய சாயலில் வர வேண்டும்; விஜய் மாற்றி பயணிப்பார் என நினைத்தேன். பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விஜய், திராவிட மாதிரி போன்று பேசுகிறார். விஜய்யின் சாயம் வெளுக்கிறதா? அல்லது வேறொரு சாயத்தை பூசுவாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.

எதிர்மறை அரசியலில் எங்களுக்கு விருப்பம் இல்லை. நாங்கள் நேர்மறை அரசியல் தான் செய்கிறோம். தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் மதுவிலக்கு கொள்கையை பேசுவது ஏன்.? சிறுத்தைபோல் இருந்த திருமாவளவன் தற்போது சிறுத்துப்போய் விட்டார்.

விசிக மது ஒழிப்பு மாநாடு எந்த தாக்கத்தையும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப் போவதில்லை; அப்பட்டமான நாடகமாக மாற்றி இருக்கிறார்கள். திமுகவை மேடையில் வைத்துக்கொண்டு எப்படி மதுவிலக்கை பற்றி பேசப்போகிறீர்கள்? என்ன கண்டனத்தை தெரிவிக்க போகிறீர்கள்?. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்