மனைவியை மிரட்டிய தொழிலாளி கைது

நெல்லை அருகே மனைவியை மிரட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-21 19:29 GMT

நெல்லை அருகே கங்கைகொண்டான் அணைத்தலையூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சின்ன ஊய்க்காட்டான் (வயது 53). தொழிலாளி. இவருடைய மனைவி மாரியம்மாள் (48).

சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் மாரியம்மாளுக்கு சின்ன ஊய்க்காட்டான் கொலைமிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து மாரியம்மாள் அளித்த புகாரின்பேரில், கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ன ஊய்க்காட்டானை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்