கூடங்குளம் முதலாவது அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு: மின் உற்பத்தி பாதிப்பு

கூடங்குளம் முதலாவது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Update: 2024-10-02 20:44 GMT

கோப்புப்படம்

நெல்லை,

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. மேலும் அங்கு 3 மற்றும் 4-வது அணு உலைகள் கட்டுமான பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

நேற்று அதிகாலையில் முதலாவது அணு உலையில் திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. முதலாவது அணு உலையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் ஓரிரு நாட்களில் தொழில்நுட்பக்கோளாறு சரி செய்யப்பட்டு முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அணுமின் நிலைய வட்டாரம் தெரிவித்தது.தற்போது இரண்டாவது அணு உலையின் மூலம் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்