பள்ளி மாணவி கடத்தல்

பள்ளி மாணவி கடத்தல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-03-22 18:45 GMT

விழுப்புரம் அருகே உள்ள பள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவி, விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்ற மாணவி, மாலையில் பள்ளி முடிந்து வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், தங்கள் மகளை புதுச்சேரி மாநிலம் நல்லூரை சேர்ந்த மலையாளத்தான் மகன் அய்யனார் என்பவர் கடத்திச்சென்றிருக்கலாம் என கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற அய்யனாரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்