பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகள போட்டிக்கு கரூா் மாணவர் தேர்வு

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகள போட்டிக்கு கரூா் மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2022-12-28 19:26 GMT

சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில் வருகிற ஜனவரி மாதம் 9,10,11,12,13 ஆகிய 5 நாட்கள் தென்மேற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகள போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், இந்தியாவில் இருந்து மட்டும் 150-க்கும் மேற்பட்ட பல்கலை கழக மாணவர்கள் பங்கு பெறும் இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியான கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் பிரதீப் 800 மீட்டர் ஓட்ட போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இவர் மாநில தடகள வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மாணவர் பிரதீப்பை கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் உள்பட ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்