கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தாா்.

Update: 2022-12-05 18:45 GMT

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள பால்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ஸ்ரீ ராமகிருஷ்ணன் (வயது 20). இவரும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகள் ஜெயஸ்ரீ (19) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு ஜெயஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, நேற்று தெங்கியாநத்தம் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் பாதுகாப்பு கேட்டு கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் இருவீட்டாரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்