இலங்கை அகதிக்கு 10 ஆண்டு சிறை

இலங்கை அகதிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-05-08 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 54). இவர் 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடந்த 2010-ம் ஆண்டு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பலமுறை இவ்வாறு நாகராஜன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் சிறுமி கர்ப்பமானார்.

இதுபற்றி அறிந்த சிறுமியின் தாய் மண்டபம் போலீசில் புகார் செய்தார். அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கோபிநாத், இலங்கை அகதி நாகராஜனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், அதனை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கீதா ஆஜரானார். 

Tags:    

மேலும் செய்திகள்