முதியவரை தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை

முதியவரை தாக்கியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

Update: 2023-04-11 18:45 GMT

தேவகோட்டை,

தேவகோட்டையை அடுத்த முப்பையூர் அருகே உள்ள பொன்னக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி (வயது 80). இவரது உறவினர் வேலுச்சாமி (40). இவர்கள் 2 ேபரின் குடும்பத்திற்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு வேலுச்சாமி தனுஷ்கோடியை தாக்கினார். இதில் அவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வேலுச்சாமி மீது வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மாரிமுத்து குற்றம் சாட்டப்பட்ட வேலுச்சாமிக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அரசு தரப்பில் அரசு வக்கீல் செந்தில் வேலவன் ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்