விருதுநகரில் கைதிக்கு கொரோனா
விருதுநகரில் கைதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த 53 வயது நபர் கொலை முயற்சி வழக்கில் ஆமத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.