நொய்யல் பகுதியில் வெல்லம் விலை உயர்வு

நொய்யல் பகுதியில் வெல்லம் விலை உயர்ந்துள்ளது.

Update: 2022-10-10 18:27 GMT

நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், நடையனூர், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்பை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,280-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,350க்கும் விற்பனையானது. கரும்பு ஒரு டன் ரூ.2,200 வரை விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளதால், வெல்லம் விலை உயர்ந்து வருதாக வியபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்