ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சமூக நீதியின் தலைமையகம் பெரியார் திடல் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெரியார் பிறந்த நாளான செப்.17ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Update: 2022-09-17 05:36 GMT

சென்னை ,

பெரியார் பிறந்த நாளான செப்.17ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் பெரியாரின் 144வது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது அதன்படி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா சாலையில் சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, அருகில் அலங்கரித்து வைக்கப்பட உள்ள உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் .

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்குமுதல் அமைச்சர் முக ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.சென்னை, பெரியார் திடலில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.சிறுகனூரில் 30 ஏக்கர் பரப்பளவில், நூலகம், ஆய்வகங்களுடன் 'பெரியார் உலகம்' அமைக்கப்படுகிறது.பெரியார் உலகில் 95 அடி உயர பெரியார் சிலை நிறுவப்பட உள்ளது

பின்னர் பேசிய முதல் அமைச்சர் மு,க.ஸ்டாலின் கூறியதாவது ;

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சமூக நீதியின் தலைமையகம் பெரியார் திடல்.பெரியார் திடல் எனது தாய் வீடு :பெரியார் திடல் வரும்போதெல்லாம் புத்துணர்ச்சி பெறுகிறேன்.தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக மாற்றும் பணியில் திராவிடர் கழகம் இருந்து வருகிறது.நாங்கள் செல்லும் பாதை பெரியார் பாதை தான்.என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்