நாமக்கலில் மாந்திரீகம் செய்வதாக மோசடி - மூதாட்டியிடம் 4 சவரன் நகை பறிப்பு

மாந்திரீகம் என்ற பெயரில் நகைப்பறிப்பில் ஈடுபட்ட ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Update: 2022-08-27 22:47 GMT

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி பாப்பாயி. இவர் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டினுள் சென்ற மர்ம நபர்கள் சிலர், மாந்திரீகம் செய்வதாக கூறி மூதாட்டியிடம் இருந்து 4 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்றனர்.

இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாந்திரீகம் என்ற பெயரில் நகைப்பறிப்பில் ஈடுபட்ட ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்