ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.24 லட்சம் மோசடி

நிலம் வாங்கி தருவாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-09-13 21:30 GMT

குனியமுத்தூர்

நிலம் வாங்கி தருவாக கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.24 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரியல் எஸ்டேட் அதிபர்

கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் அப்துல் நாசர் (வயது 48). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக கோவை செல்வபுரத்தை சேர்ந்த சாகுல் அமீது, ஷான்ஷா, செரீப் உள்பட 4 பேர் அறிமுகம் ஆனார்கள்.

இந்த நிலையில் செல்வபுரத்தில் 5.5 சென்ட் நிலம் இருக்கிறது. அது எனக்கு தெரிந்த நபர்தான் வைத்து இருக்கிறார். அந்த நிலத்தை நான் வாங்கித்தருகிறேன் என்று சாகுல் அமீது, அப்துல் நாசரிடம் கூறி உள்ளார். அத்துடன் அதற்கான பணத்தையும் கேட்டு உள்ளார்.

ரூ.24 லட்சம் மோசடி

இதையடுத்த கடந்த 2020-ம் ஆண்டு பல்வேறு தவணைகளாக அப்துல் நாசர், சாகுல்அமீது வங்கி கணக்கில் ரூ.24 லட்சத்தை செலுத்தினார். ஆனால் அவர் சொன்னபடி அந்த நிலத்தை வாங்கி கொடுக்கவில்லை. இது தொடர்பாக அப்துல் நாசர் பலமுறை சாகுல் அமீதுவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதும் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.

இதை தொடர்ந்து அப்துல் நாசர், சாகுல் அமீதுவின் வீட்டுக்கு நேரில் சென்று தனக்கு நிலம் வேண்டாம், நான் கொடுத்த ரூ.24 லட்சத்தை திரும்ப கொடுங்கள் என்று கூறி உள்ளார். அதற்கு அங்கு இருந்த சாகுல் அமீது, ஷான்ஷா, செரீப் உள்பட 4 பேர் பணத்தை திரும்ப கொடுக்க முடியாது, பணத்தை கேட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

4 பேர் மீது வழக்கு

இது குறித்து அப்துல் நாசர் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சாகுல் அமீது, ஷான்ஷா, செரீப் உள்பட 4 பேர் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்