தைல மரக்காட்டில் தீ

தைல மரக்காட்டில் தீ பிடித்தது.

Update: 2022-05-22 18:21 GMT

விராலிமலை:

விராலிமலை தாலுகா புதுப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தைல மரக்காட்டின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், அப்பகுதி வழியாக செல்லும் மின் கம்பிகளில் ஏற்பட்ட மின் கசிவினாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மின் கம்பிகளை மின்வாரிய அதிகாரிகள் விரைவில் சரி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்