3 சாமி சிலைகள் கண்டெடுப்பு

3 சாமி சிலைகள் கண்டெடுப்பு

Update: 2023-03-29 20:33 GMT

திருவையாறில் வாய்க்கால் மதகு கட்ட குழி தோண்டிய போது 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

3 சாமி சிலைகள் கண்டெடுப்பு

திருவையாறை அடுத்த கருப்பூர் கிராமத்தில் அந்தலி தலைப்பு மதகு கட்ட அந்த பகுதி மக்கள் குழி தோண்டினர். அப்போது 3 அடி உயரம் கொண்ட ஒரு அம்மன், ஒரு பிள்ளையார், ஒரு வராகி அம்மன் ஆகிய 3 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து கருப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மதிவிழிசெந்தமிழ்செல்வன் திருவையாறு தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

எந்த காலத்து சிலைகள்

தகவலறிந்த தாசில்தார் பழனியப்பன், வருவாய் ஆய்வர் நவநீதகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயபாரதி மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு 3 சிலைகளையும் மீட்டு தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலம் தொல்பொருள் ஆய்வு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும், இது எந்த காலத்து சிலைகள் என்பது தொல்பொருள் ஆய்வு துறையினர் ஆய்வு செய்தபின்னர் தெரியவரும் என்று தாசில்தார் பழனியப்பன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்