கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்திற்கு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் திறக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் திறக்க மறுப்பதால் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியும் காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேட்டவலம் கே.மணிகண்டன் தலைமை தாங்கினார்.
அப்போது விவசாயிகள் காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.