இடவசதி இல்லாததால் நெடுஞ்சாலையில் நெல்லை உலர்த்தும் விவசாயிகள்

ராராமுத்திரக்கோட்டை பகுதியில் இடவசதி இல்லாததால் நெடுஞ்சாலையில் நெல்லை விவசாயிகள் உலர்த்துகிறார்கள். இதனால் புதிய உலர்களம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-10-09 21:43 GMT

மெலட்டூர்;

ராராமுத்திரக்கோட்டை பகுதியில் இடவசதி இல்லாததால் நெடுஞ்சாலையில் நெல்லை விவசாயிகள் உலர்த்துகிறார்கள். இதனால் புதிய உலர்களம் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல் சாகுபடி

தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம், ராராமுத்திரக்கோட்டை பகுதியில் சுமார் 1500 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இங்கு குறுவை, சம்பா மற்றும் கோடை விவசாயம் என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்ககூடிய நெல்லை உலர்த்த உலர் களம் வசதி இல்லைஅரசு கொள்முதல் நிலையத்தில் போதுமான இடவசதியோ அல்லது களம் வசதியோ இல்லாததால் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அருகே உள்ள கிராம சாலையில் கொட்டி வைத்து தினசரி உலர்த்தி வருகின்றனர். சாலையில் நெல் உலர்த்துவதால் கிராமத்தில்வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் நெல் உலர்த்தும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

புதிய உலர்களம்

விவசாயிகளுக்கு நெல் உலர்த்த புதிய உலர் களம் அமைத்து தந்தால் பயன்உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராராமுத்திரகோட்டை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-ராராமுத்திரகோட்டை பகுதியில் 1500 ஏக்கருக்கும் மேலாக விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு விளைய கூடிய நெல்லை காயவைக்க உலர் களம் இல்லை. அரசு கொள்முதல் நிலையத்திலும் நெல்லை காயவைக்க இடவசதி இல்லைநெல்லை நன்கு காயவைத்து எடுத்து சென்றால் தான் அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யமுடியும். மழை காலங்களில் நெல்லை காயவைக்க முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே நெல்லை உலர்த்த அரசு உலர் களம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்