விவசாயிகள் பிரசார நடை பயணம்

தியாகதுருகத்தில் விவசாயிகள் பிரசார நடை பயணம நடைபெற்றது.

Update: 2023-03-08 19:55 GMT

கண்டாச்சிமங்கலம், 

விவசாய தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி டெல்லியில் நடைபெறும் பேரணி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார நடைபயணம் தியாகதுருகம் அருகே குடியநல்லூர் கிராமத்தில் நடந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் அருள்தாஸ் தலைமை தாங்கி நடைபயணத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி, மாவட்ட தலைவர் ஏழுமலை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அப்போது தமிழ்நாடு விவசாய சங்க வட்ட செயலாளர் தெய்வீகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் கோவிந்தசாமி, தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் சிவா, வட்ட தலைவர் கொளஞ்சி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் பெரியசாமி உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்