குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயன்றார்.

Update: 2022-07-06 14:42 GMT

தீக்குளிக்க முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக 3-வது மாடியில் அமைச்சர்கள் காந்தி, மூர்த்தி, தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு காவேரிப்பட்டணம் அடுத்த கருக்கன்சாவடி கிராமத்தை சேர்ந்த விவசாயி தட்சிணாமூர்த்தி (வயது 36), தனது குடும்பத்துடன் வந்து மண் எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தினர்.

அப்போது தட்சிணாமூர்த்தி கூறுகையில், எங்கள் ஊரான கருக்கன்சாவடியில், என் தந்தை பொன்னுசாமி தனது் குடும்ப சொத்தில், அவரது பாகத்துடன், பெரியப்பாவின் சொத்தையும் வாங்கி பத்திரப்பதிவு செய்து 35 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறோம். எனது பெரியப்பா மகன்களான கோவிந்தராஜ் மற்றும் 5 பேர் அவர்களை ஏமாற்றி நிலத்தை வாங்கியதாக கூறி, நிலத்தை திரும்பி கேட்டு தகராறு செய்கின்றனர். இது குறித்து போலீசில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எனவே கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றோம் என்று கூறினார்.

பரபரப்பு

இதையடுத்து தீக்குளிக்க முயன்ற தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 8 பேரையும் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அமைச்சர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்த சமயத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்