வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு

சரவணம்பட்டியில் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நடன மாஸ்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-19 18:45 GMT

சரவணம்பட்டி

சரவணம்பட்டியில் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நடன மாஸ்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வியாபாரி

கோவை சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 45), வியாபாரி, இவர் சரவணம்பட்டி-காளப்பட்டி சாலையில் கரும்பு ஜூஸ் மற்றும் தர்பூசணி பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வரும் வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து ஜூஸ் குடித்தும், பழங்கள் வாங்கியும் முழு பணத்தை தராமல் தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று மீண்டும் கடைக்கு வந்த அந்த வாலிபர் பழங்கள் வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார், அந்த வாலிபரை கண்டித்ததாக தெரிகிறது.

பின்னர் சில நாட்களுக்கு பிறகு அந்த வாலிபர் தனது நண்பர்கள் 2 பேருடன் பழக்கடைக்கு வந்தார். தொடர்ந்து ஜூஸ் மற்றும் பழங்கள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் சென்றார்.

பணம் பறிப்பு

இதனால் சசிகுமாருக்கும், அந்த 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி சசிகுமாரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து சசிகுமார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

நடன மாஸ்டர் கைது

விசாரணையில், சசிகுமாரிடம் பணத்தை பறித்து சென்றது கணபதி அடுத்த வ.உ.சி. நகரை சேர்ந்த நடன மாஸ்டர் நித்திஷ்குமார் (வயது 21), அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திருமுருகன் (40), காந்திமாநகரை சேர்ந்த மோகன் பிரசாத் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்