சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் எழுத்து தேர்வு

போலீஸ் எழுத்து தேர்வை 6,667 பேர் எழுதினர்

Update: 2022-11-27 18:45 GMT

காரைக்குடி, 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள கிரேடு 2 போலீசார், சிறைவார்டன், தீயணைப்பு படை வீரர்கள் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 10 மையங்களில் நடைபெற்றது. தேர்வு எழுத தகுதி பெற்றோர் 8 ஆயிரத்து 25 பேர். இதில் தேர்வு எழுதியவர்கள் ஆண்கள் 5 ஆயிரத்து 631, பெண்கள் ஆயிரத்து 35, மூன்றாம் பாலினத்தவர் 1 என மொத்தம் 6 ஆயிரத்து 667 பேர் தேர்வு எழுதினர். ஆயிரத்து 358 பேர் தேர்வு எழுதவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்