விசாரணைக்கு வந்த முதியவர் கோர்ட்டில் மயங்கி விழுந்து சாவு

விசாரணைக்கு வந்த முதியவர் கோர்ட்டில் மயங்கி விழுந்து, இறந்தார்

Update: 2023-06-22 20:38 GMT

திருமங்கலம், 

திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விபட்டியை சேர்ந்தவர் தனுசுராம்(வயது 65). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். தனுசுராம் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக திருமங்கலம் மாவட்ட உரிமையியல் கோர்ட்டுக்கு நேற்று வந்திருந்தார். இதையொட்டி அவர் விசாரணையின் அழைப்பிற்காக கோர்ட்டின் வெளியில் காத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தனுசுராம் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்