3 நாட்களாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் திடீர் மறியல்

அறந்தாங்கி அருகே 3 நாட்களாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-05-26 18:23 GMT

பொதுமக்கள் திடீர் மறியல்

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொடிவயல் கிராமத்தில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் பேராவூரணி செல்லும் சாலையில் நேற்று திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கொடிவயல் கிழக்கு பகுதிக்கு மின்சாரம் வழங்கும் டிரான்ஸ்பார்மர் பழுதானதால் கடந்த 3 நாட்களாக மின்சாரம் இன்றி அவதிப்படுகிறோம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம் என்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

பொதுமக்களின் திடீர் மறியலால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்