திரவுபதியம்மன் கோவில் தேரோட்டம்

சங்கராபுரம் அருகே திரவுபதியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-24 18:45 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே ஆரூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு திரவுபதியம்மன் கோவிலில் தேர்திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. மேலும் பாஞ்சாலி பிறப்பு, ஊரணி பொங்கல், சாமி வீதிஉலா, திருக்கல்யாணம் காளி கோட்டை இடித்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்