வேதாரண்யம் பகுதிகளில் வளர்ச்சி பணிகள்

வேதாரண்யம் பகுதிகளில் வளர்ச்சி பணிகள்

Update: 2022-11-04 18:45 GMT

வேதாரண்யத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ேநரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு

வேதாரண்யம் தாலுகா பகுதிகளில் பல்வேறு இடங்களில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோவில்பத்து ஊராட்சி வடக்கு தெருவில் உள்ள பிரப்பாங்கண்ணி குளத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.75 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் மற்றும் படித்துறை கட்டும் பணிகளையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டிட பழுது நீக்கம் செய்யும் பணிகளையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து கோவில்பத்து ஊராட்சி தெற்கு தெருவில் ரூ.6.38 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டதின் கீழ் சிமெண்டு சாலை மற்றும் வெள்ளப்பள்ளம் ஊராட்சி மன்மதன்கோவில் தெருவில் 15-வது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.3.95 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியையும் பார்வையிட்டனர்.

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்

வெள்ளப்பள்ளம் ஊராட்சி மற்றும் கோவில்பத்து ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நாலுவேதபதி ஊராட்சியில் 15-வது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.6.80 லட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கும் பணியையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.67 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, புதிதாக கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம் மற்றும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

படித்துறை அமைக்கும் பணி

பழங்கள்ளிமேடு ஊராட்சியில் உள்ள திருவாசல் குளத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் படித்துறை அமைக்கும் பணிகளையும், நாலுவேதபதி ஊராட்சி அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் கள்ளிமேடு ஊராட்சியில் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சைக்கிள் நிறுத்தம் அமைக்கும் கட்டுமான பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.56 லட்சம் மதிப்பீட்டில் கள்ளிமேடு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்