விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2023-10-16 19:30 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள ஆலமரத்து கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவருடைய மகன் சக்திவேல் (வயது 20). இவர் மணலூரில் உள்ள நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் உறவினர் பூவரசன் (19) என்பவருடன் சென்றார். மணலூர் மணலூர் அருகே சென்றபோது அங்குள்ள விவசாய நிலத்தில் இருந்த கற்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக இழந்தார். மூர்த்தி மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்