விபத்தில் தம்பதி படுகாயம்

விபத்தில் தம்பதி படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-07-24 19:16 GMT

சிவகாசி, 

சாத்தூர் போக்குவரத்து நகரில் வசித்து வருபவர் அய்யாச்சாமி (வயது 50). இவரது மனைவி இருளாயி (45). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நென்மேனி-நாகலாபுரம் ரோட்டில் சென்றனர். அங்குள்ள கோழிப்பண்ணை அருகே சென்ற போது திடீரென நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்