ரூ.2¼ கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி

மிருகண்டா நதியின் குறுக்கே ரூ.2¼ கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணியை சரவணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-14 11:49 GMT

கலசபாக்கம்

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியம், சிறுவள்ளூர் ஊராட்சி, அய்யம்பாளையம் செல்லும் சாலையில் மிருகண்டா நதி குறுக்கே நபார்டு வங்கி நிதியுதவியுடன் ரூ.2 கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி இன்று தொடங்கப்பட்டது.

இதனை கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, முருகன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்