குளிக்க சென்ற கல்லூரி மாணவன் குளத்தில் மூழ்கி சாவு

குளிக்க சென்ற கல்லூரி மாணவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-02 18:56 GMT

விராலிமலை:

விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் அழகுமுத்துபாண்டி (வயது 19). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது வீட்டின் அருகே உள்ள தட்டான் குளத்திற்கு குளிக்கச்சென்றுள்ளார். அப்போது குளத்தில் ஆழமான பகுதிக்கு அழகுமுத்துபாண்டி சென்றதால் நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து விராலிமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை போலீசார் அழகுமுத்து பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்