பி.எஸ்.என்.எல். தொலை்தொடர்புத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா

விருதுநகரில் பி.எஸ்.என்.எல். தொலை்தொடர்புத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-20 18:57 GMT

விருதுநகர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அகில இந்திய பி.எஸ்.என்.எல். மற்றும் தொலைதொடர்பு துறை ஓய்வூதியர் சங்கம் விருதுநகர் மாவட்ட கிளை சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தினை மாநில உதவித்தலைவர் பெருமாள் சாமி தொடங்கி வைத்தார். பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். போராட்டத்தின் போது கடந்த 1.1.2017 முதல் ஓய்வூதிய மாற்றத்தை உடனே அமல்படுத்த கோரியும், முடக்கப்பட்ட அகவிலைப்படியை உடனே வழங்க வலியுறுத்தியும், நிலுவையில் உள்ள மருத்துவ படி மற்றும் இதரபடிகளை உடனே வழங்க கோரியும், ஓய்வூதிய பலன்களை தாமதம் இல்லாமல் வழங்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.


Tags:    

மேலும் செய்திகள்