பெட்டிக்கடைக்கு தீவைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெட்டிக்கடைக்கு தீவைக்கப்பட்டது.

Update: 2022-05-22 19:29 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது 62). இவர் காடனேரி விலக்கு அருகே ஒரு பெட்டிக் கடை வைத்துள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடையை திறக்கவில்ைல. இ்ந்தநிலையில் நத்தம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெரியகருப்பன் கடை தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்ததை பார்த்தனர். உடனே அவர்கள் தீயை அணைத்ததுடன், பெரிய கருப்பனுக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த தீவிபத்தில் கடைக்குள் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரியகருப்பன் அளித்த புகாரின் பேரில் நத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்