போரூர், பெருங்குடி ஏரிகள் ரூ.20 கோடியில் மேம்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் பி கே சேகர்பாபு வெளியிட்டார்

Update: 2024-06-22 08:34 GMT

சென்னை,

சட்டசபையில் இன்று சி.எம். டி.ஏ. மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு துறை சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் பி கே சேகர்பாபு வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது,

சென்னைப் பெருநகர் பகுதியில் 10 பொது நூலகங்கள், அதிவேக இணையம், போட்டித்தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் ஆகியவை ரூ.20 கோடி செலவில் மேம்படுத்தப்படும். மேலும் ரூ.30 கோடி செலவில் மூன்று பன்நோக்கு மையம் அமைக்கப்படும். 'சென்னை அங்காடி'ரூ.40 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். சென்னை நகரில் வெள்ள அபாயத்தை குறைக்க வெள்ளக்கட்டுப்பாடு வரைபடம் தயாரிக்கப்படும்.மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை மெரினா பாரம்பரிய வழித்தடம் ரூ,10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். அண்ணாசாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் உள்ளூர் பகுதி திட்டம் செயல்படுத்தப்படும்.கோயம்பேடு மார்க்கெட் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

சென்னை பெருநகரத்தில் அமைந்துள்ள 10 சுரங்கப்பாதைகள் ரூ,8 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். .திருவான்மியூர் பஸ் நிலையம் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். போரூர் ஏரி ரூ.10 கோடியிலும், பெருங்குடி ஏரி ரூ.10 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்