மாட்டுத்திருவிழாவில் பங்கேற்ற பாகுபலி மாடு

ஓசூர் அருகே மாட்டுத்திருவிழாவில் பங்கேற்ற பாகுபலி மாட்டை பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்தனர்.

Update: 2023-01-28 18:45 GMT

ஓசூர்

ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சப்பளம்மா தேவி கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஒரு வார காலம் நடைபெறும் இந்த விழாவில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் அலங்கரிக்கப்பட்டு விற்பனைக்காக அழைத்து வரப்பட்டன. இந்த நிலையில், நேற்று, கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள ஒயிட்பீல்ட் பகுதியில் இருந்து அழைத்துவரப்பட்ட "பாகுபலி" என்ற பெயரிலான காளை மாடு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இதனை பார்த்து பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்து கொண்டனர்.பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியை சேர்ந்த முரளி (32) என்பவர் இந்த காளையை வளர்த்து வருவதாகவும் மற்ற மாடுகளை விட, பாகுபலி காளையை தூய்மையான பகுதியில் வளர்ப்பதாகவும் பருத்திக்கொட்டை, புண்ணாக்கு என மாதம் 30,000 ரூபாய் வரை செலவிட்டு பராமரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்