சிறந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பரிசு

சிறந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பரிசினை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

Update: 2023-03-14 20:29 GMT


சிறந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பரிசினை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

ஆய்வுக்கூட்டம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடன் கடந்த மாதத்திற்கான பணி திறனாய்வு கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தாசில்தார்களில் சாத்தூர் தாசில்தார் வெங்கடேசன் முதல் பரிசும், ராஜபாளையம் ராமச்சந்திரன் 2-வது பரிசும் வத்திராயிருப்பு உமா மகேஸ்வரி 3-வது பரிசும் பெற்றனர்.

சிறப்பாக பணியாற்றிய தனித்தாசில்தார்களில் சாத்தூர் தனி தாசில்தார் சீதாலட்சுமி, ஸ்ரீவில்லிபுத்தூர் ராமதாஸ் ஆகியோருக்கு முதல் பரிசும், அருப்புக்கோட்டை தனி தாசில்தார் சிவக்குமார் 2-வது பரிசும், சிவகாசி தனித்தாசில்தார் சாந்தி 3-வது பரிசும் பெற்றனர்.

பட்டா மாறுதல்

பட்டா மாறுதலுக்கான மனுக்களை அதிக அளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணைத்தாசில்தார்களில் திருச்சுழி மண்டல துணை தாசில்தார் சரவணகுமார் முதல் பரிசும், சாத்தூர் ராஜாமணி 2-வது பரிசும், வெம்பக்கோட்டை அகஸ்தீஸ்வரன் 3-வது பரிசும் பெற்றனர்.

உட்பிரிவு பட்டா மாறுதலுக்கான மனுக்களில் அதிக அளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் அருப்புக்கோட்டை வட்ட துணை ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் வெம்பக்கோட்டை மாரிமுத்து ஆகியோர் முதல் பரிசும், சிவகாசி சுப்புராஜா 2-வது பரிசும் பெற்றனர். அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த வட்ட சார் ஆய்வாளர்களில் வெம்பக்கோட்டை வட்ட சார் ஆய்வாளர் முனியராஜ் முதல் பரிசினையும், சிவகாசி சுரேஷ் 2-வது பரிசினையும், காரியாபட்டி கணேசன் மற்றும் அருப்புக்கோட்டை குறுவட்ட ஆய்வர் ராஜபாண்டி ஆகியோருக்கு 3-வது பரிசினையும் கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சிவகாசி ஆர்.டி.ஓ. விசுவநாதன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்