ஆட்டோவுக்கு தீ வைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆட்டோவுக்கு தீவைக்கப்பட்டது.

Update: 2022-12-25 19:49 GMT

வன்னியம்பட்டி, 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கீழபொட்டல்பட்டியை சேர்ந்தவர் அய்யர் (வயது 27). இவர் ஆட்டோவை தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆட்டோவிற்கு தீவைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆட்டோ முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து அய்யர் அளித்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்