எரிசாராயம் வைத்திருந்தவர் கைது

எரிசாராயம் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-17 14:44 GMT

திருவண்ணாமலை மங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கருமாரப்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவரிடம் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 கேன்களில் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் விழுப்புரம் மாவட்ட மேல்மலையனூர் கொடுங்கன்குப்பம் பகுதியை சேர்ந்த குமார் (வயது 38) என்பதும், எரிசாராயம் விற்பனை செய்ய கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த 175 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்