போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ஏரலில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்நடந்தது.
ஏரல்:
ஏரலில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் தொடங்கி வைத்தார். ஊர்வலம் ஏரல் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி, காந்தி சிலை வழியாக சினிமா தியேட்டர் அருகே நிறைவு பெற்றது. இதில் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.