ஆண்டு விழா

தமிழ் இலக்கிய பேரவை ஆண்டு விழா

Update: 2022-08-07 21:22 GMT

அம்பை:

அம்பை தமிழ் இலக்கிய பேரவையின் 47-வது ஆண்டு விழா அம்பையில் ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரவை தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். ஆண்டு விழா, மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா, சேவை மற்றும் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் இலக்கிய பட்டிமன்றம் என 4 அமர்வுகளாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அம்பை நகரசபை தலைவர் பிரபாகர பாண்டியன், கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். சாதனையாளர்களை பாராட்டி கவுரவித்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் கண்ணன், செயலாளர் லட்சுமணன், பொருளாளர் பாரதி கண்ணன், இலக்கிய நிகழ்ச்சி அமைப்பாளர் இளங்கோ, துணைச் செயலாளர் செந்தில்குமரன் மற்றும் இலக்கிய பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்