விசிக சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் மது ஒழிப்பு மகளிர் குழு உருவாக்கப்படும்: திருமாவளவன்

விசிக சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் மது ஒழிப்பு மகளிர் குழு உருவாக்கப்படும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-08 06:41 GMT

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொ.திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற 'மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் 'மாநாடு' மாபெரும் வெற்றி மாநாடாக அமைந்தது. விசிகவின் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டையே வெல்லும் மாநாடாக இம்மாநாடு அமைந்தது.

2 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இம்மாநாட்டில் பங்கேற்றது கூடுதல் சிறப்பு. மாநாட்டில் பங்கேற்ற மகளிர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்த தோழமை இயக்கங்களின் தலைவர்களுக்கும் குறிப்பாக மகளிர் அணி தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வொரு கிராமத்திலும் மது ஒழிப்பு மகளிர் குழு உருவாக்கப்படும். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்