எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு

எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கு

Update: 2023-03-01 18:45 GMT

தொண்டி,

திருவாடானை அரசு கல்லூரியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அழகு மற்றும் ரெட் ரிப்பன் கிளப் ஆகியவை இணைந்து கல்லூரி மாணவ மாணவியருக்கான வாழ்க்கை திறன் கல்வி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தியது.

கல்லூரி முதல்வர் மாலதி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட மேலாளர் முருகேசன், திருவாடானை அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் சாந்தி மணி, எச்.ஐ.வி பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு ஆலோசகர் பாண்டி, வட்டார காசநோய் தடுப்பு மேற்பார்வையாளர் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்வினை தொற்று தடுப்பு, எச்.ஐ.வி, வாழ்க்கை திறன் கல்வி, காசநோய், எச்.ஐ.வியுடன் எவ்வாறு வாழ்வது என்பது போன்ற பல்வேறு தலைப்புகளில் கருத்துறை வழங்கினர்.

இந்தநிகழ்ச்சியில் ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி, பேராசிரியை மணிமேகலை மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்