ஆனி கடைசி முகூர்த்த தினம்: சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு

ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினத்தையொட்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-07-12 01:26 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான 12-ந்தேதி (இன்று) அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உள்ளன.

எனவே, ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான 12-ந்தேதி (இன்று) ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் மற்றும் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்