போடி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

போடி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-09-19 17:26 GMT

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே உள்ள காளாப்பூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் கிஷோர் (வயது 23). இவர், போடி அருகே ெரங்கநாதபுரத்தில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே உள்ள வாட்டர் சர்வீஸ் நிலையத்தை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து நடத்தி வந்தார்.

இந்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் வாட்டர் சர்வீஸ் நிலையத்துக்கு தொழிலாளர்கள் வந்தனர். அப்போது நிலைய கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. மேலும் கிஷோரின் செல்போன் எண்ணிற்கு அவர்கள் தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த தொழிலாளர்கள், கிஷோர் தங்கியிருந்த அறையின் பின்பக்கம் இருந்த ஜன்னல் வழியாக எட்டிபார்த்தனர். அப்போது அவர் தூக்கில் பிணமாக கிடந்தார்.

உடனே இதுகுறித்து போடி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தொழிலாளர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பூட்டி கிடந்த அறையின் கதவை‌ உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் கிஷோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிஷோர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்