இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம் ஆனார்.

Update: 2022-11-02 19:18 GMT

தோகைமலை அருகே உள்ள காவல்காரன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த சின்னையன். இவரது மகள் சவுந்தர்யா (வயது24). இவர் திருச்சியில் உள்ள ஒரு பெயிண்ட் கடைக்க வேலைக்க சென்று வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்றும் வழக்கம்போல் வேலைக்கு சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறி விட்டு வெளியே சென்றார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் சவுந்தர்யா வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் சவுந்தர்யா கிடைக்கவில்லை. இதுகுறித்து சவுந்தர்யாவின் தாய் அன்னக்கிளி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்