குடிபோதையில் கூரைவீட்டுக்கு தீ வைத்த தொழிலாளி

ரிஷிவந்தியம் அருகே குடிபோதையில் கூரைவீட்டுக்கு தீ வைத்த தொழிலாளி போலீஸ் நிலையத்தில் மனைவி புகார்

Update: 2022-11-18 18:45 GMT

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் அருகே உள்ள மேலப்பழங்கூரை சேர்ந்தவர் நாராயணன் மனைவி அய்யம்மாள்(40). இருவரும் கரும்பு வெட்டும் தொழிலாளிகள். மது குடிக்கும் பழக்கம் உடைய நாராயணன் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் அய்யம்மாள் மற்றும் பிள்ளைகளை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு கூரை வீட்டுக்கும் தீ வைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யம்மாள் அக்கம்பக்கத்தினர் உதவியோடு தீயை அணைத்தார். பின்னர் இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் நாராயணன் மீது ரிஷிவந்தியம் போலீசாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்