துர்நாற்றம் வீசும் கழிவுநீர் வாய்க்காலை மூட கோரிக்கை

துர்நாற்றம் வீசும் கழிவுநீர் வாய்க்காலை மூட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-26 19:41 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்-சிதம்பரம் சாலையில் திறந்த நிலையில் கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. அதே பகுதியில் சில கோழிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர், இந்த வாய்க்கால் வழியாகத்தான் செல்கிறது. கோழி கழிவுகள், தனியார் நிறுவனங்களின் கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுகள் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. அப்பகுதியில் வங்கி, ஓட்டல்கள், தனியார் மருத்துவமனைகள் உள்ளன. சரக்கு ஆட்டோக்களும் அப்பகுதியில் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் கழிவுநீர் வாய்க்கால் திறந்த நிலையில் உள்ள பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எனவே சுமார் 25 மீட்டர் தூரமுள்ள இந்த சாக்கடை கழிவுநீர் வாய்க்காலின் 2 புறமும் தடுப்புச்சுவர் அமைத்து சிமெண்டு சிலாப் போட்டு மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்