கஞ்சா விற்ற 3 பேர் கைது

போடியில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-08-26 13:41 GMT

போடி தாலுகா போலீசார் தேவாரம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது சங்கராபுரம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே கஞ்சா விற்ற கே.கே பட்டியை சேர்ந்த தமிழரசன் (வயது 27), சில்லமரத்துபட்டியை சேர்ந்த அஜய் குமார் (24) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள், ரூ.35 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் ஜக்கநாயக்கன்பட்டி நகராட்சி கழிப்பிடம் அருகே கஞ்சா விற்ற ஜக்கநாயக்கன்பட்டி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த மகாவிஷ்ணு (21) என்பவரை போடி நகர் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்