வாக்காளர் சந்திப்பின்போது, பன்னீர்செல்வத்திற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் வாக்காளர் சந்திப்பின் போது அவருக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று கூட்டறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

Update: 2017-02-22 16:25 GMT
சென்னை,

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சபாநாயகர் மீது, திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து கவலையில்லை, மக்கள் தான் எங்கள் நீதிமான்கள். வாக்காளர் சந்திப்பின்போது, பன்னீர்செல்வத்திற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். பன்னீர்செல்வம் பின்னால் சென்றவர்கள் விரைவில் கட்சி திரும்புவார்கள்.திமுகவின் உண்ணாவிரதப்போராட்டத்தை மக்கள் ஆதரிக்கவில்லை.

இவ்வாறு கூட்டறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்